News September 10, 2024
பூமிக்கு மிக அருகில் ஒரு ‘விண்கல்’

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக, ISRO எச்சரித்துள்ளது. ‘அபோபிஸ்’ என்ற இந்த விண்கல், 2029 ஏப்ரல் 13இல் பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அளவுக்கு பெரிதாகவும், INS விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றமும் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 KM தொலைவில் உள்ளது. இதுபோன்ற பெரிய விண்கல், இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை எனக் கூறப்படுகிறது.
Similar News
News July 5, 2025
இன்று நிலநடுக்கம், சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!

புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ரியோ தாட்சுகியின் கணிப்பால் ஜப்பான் மக்கள் இன்று பீதியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஜூலை 5-ம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என 2021-ம் ஆண்டிலேயே அவர் கணித்திருந்தார். இதனிடையே, ஜப்பானின் டொகாரா தீவில் கடந்த வாரம் 900 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாட்சுவின் கணிப்பு நடக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பான் அரசு இதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.
News July 5, 2025
ஜூலை 5, 1950… அன்று தொடங்கிய சகாப்தம்!

இன்றைக்கு எந்த நொடியிலும் உலகில் என்ன நடக்கிறது என்பதை 24*7 லைவ் செய்திகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதற்கெல்லாம் தொடக்கம் 1950-ல் இதே நாளில் 20 நிமிடங்கள் ஓடிய முதல் செய்தி ப்ரோக்ராமை BBC ஒளிபரப்பியதுதான். இதனை தொடர்ந்துதான் பல செய்தி நிறுவனங்கள் தினசரி செய்தி தொகுப்பை டிவியில் கொண்டு வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு 24 மணி நேரமும் லைவ் செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது.
News July 5, 2025
முதல் பெண் ‘போர் விமானி’ ஆனார் ஆஸ்தா புனியா!

இந்திய கடற்படை போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தேர்வாகி சாதனை புரிந்துள்ளார். ‘தங்கச் சிறகுகள்’ விருதையும் அவர் பெற்றார். ஏற்கெனவே, கடல்சார் ரோந்து விமானங்கள் & ஹெலிகாப்டர்களின் விமானிகளாக பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புனிதா போர் விமானியாக பொறுப்பேற்றதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.