News September 10, 2024
ராணிப்பேட்டை ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா குறித்து நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஓவியம், கவிதை மற்றும் கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உடன் இருந்தனர்.
Similar News
News September 4, 2025
மின்னல் ஊராட்சியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள மின்னல் ஊராட்சி நியாய விலை கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்களுக்கு தரமான மற்றும் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
News September 3, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராணிப்பேட்டை, அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு உட்பட 18 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்கு 9884098100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
News September 3, 2025
சாலைக்காக நிலத்தினை பத்திர பதிவு செய்த விவசாயி

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று (03.09.2025) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கிராமத்தில் 30 வருடங்களாக வசித்து வரும் 100 குடும்பங்களின் பயன்பாட்டிற்காக, சீதாராமன் மற்றும் கன்னிகம்மாள் என்ற இருவர் தங்கள் நிலத்தை சாலையாக தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது சமூகப்பணியை ஆட்சியர் பாராட்டினார்.