News September 10, 2024

அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்ளாக கலந்து கொள்ள விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு கடைசி தேதி 18.9.24 ஆகும். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதற்கு கரூரைச் சேர்ந்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 13, 2025

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (13.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உள்ளனர்.

News August 13, 2025

கரூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச திறன் பயிற்சி!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கரூர் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து மெர்ச்சன்டைசர் குவாலிட்டி கன்ட்ரோல், மற்றும் இன்ஸ்பெக்சன் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், போன்ற பயிற்சிகள் 100 சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் புகளூர் பகுதியில் பயிற்சி நடத்தப்பட இருகின்றன. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 9489736687 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

News August 13, 2025

கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

error: Content is protected !!