News September 10, 2024
வேலூர் அஞ்சல் துறை அறிவிப்பு

வேலூர் கோட்ட அஞ்சல் துறை குறைதீர்வு கூட்டம் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் 13-ஆம் தேதிக்குள் அஞ்சல் கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Similar News
News August 13, 2025
வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்தி 57 ஆயிரத்து 48 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வருகின்றனர். இதில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில், தங்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.