News September 10, 2024

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிழம்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(40 ). பாஜக நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வேலை பார்க்க வந்த 35 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று(செப்.09) ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

image

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

News July 5, 2025

நெல்லையில் 20 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

image

நெல்லை அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 167 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 20 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News July 4, 2025

காவல்துறைக்கு வருவதற்கு காரணம் என் மனைவி – துணை காவல் ஆணையர்

image

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் பேசினார். அவர் கூறியதாவது; தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் மாணவிகள் வெற்றி பெறலாம். மருத்துவத்துறையில் இருந்து காவல்துறைக்கு வந்ததற்கு என் மனைவியின் ஆதரவு முக்கிய காரணம் என்றார்.

error: Content is protected !!