News September 10, 2024
கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

வாத்தலை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News May 8, 2025
திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
முசிறி – என். தியாகராஜன் (9443838388)
ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.