News September 9, 2024
பள்ளி மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை..

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் <<14062012>>காலாண்டு <<>>விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 -10ஆம் வகுப்புக்கு செப்.20 – 27 வரை, 11 – 12ஆம் வகுப்புக்கு செப்.19 -27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
Sinquefield Cup: குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

Sinquefield Cup செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை முதல் சுற்றிலேயே கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். இதன் மூலம், உலக தரவரிசை பட்டியலில், குகேஷை முந்தி பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்துள்ளார். 3 ஆண்டுகளில் பிரக்ஞானந்தா ஒரு கிளாசிக்கல் செஸ் போட்டியில் குகேஷை தோற்கடிப்பது இதுவே முதல்முறை. 8 ரவுண்டுகள் கொண்ட Sinquefield Cup தொடரில், பிரக்ஞானந்தாவுடன் 6 வீரர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.
News August 19, 2025
₹399 கட்டணத்தில் ChatGPT Go

ஓபன் ஏஐ நிறுவனம் மாதம் ₹399 கட்டணத்தில் ChatGPT Go பிளானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ChatGPT சந்தா மாதம் ₹1,999 ஆக இருப்பதால் பலரும் அதில் இணைய தயங்கிய நிலையில் இந்த மலிவான பிளான் அறிமுகமாகியுள்ளது. இதில் GPT 5, அதிக மெசேஜ் / இமேஜ் அப்லோட் மற்றும் மேம்பட்ட இமேஜ் ஜெனரேஷன், நீண்ட மெமரி, விரிவான ஆய்வுத்தகவல் அணுகல், Projects, tasks, custom GPTs உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
News August 19, 2025
அணியில் ஷ்ரேயஸ் இல்லாதது ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாதது துரதிஷ்டவசமானது என்ற அவர், அபிஷேக் நன்றாக விளையாடுவதால் அவரை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.