News September 9, 2024
மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்-119 மனுக்கள் பெறப்பட்டது

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டு, 119 பேரிடமிருந்து மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
திருவள்ளூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

திருவள்ளூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 10, 2025
திருவள்ளுர்: தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில்ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வரும் தனுஷ்நாத் என்பவர் கடந்த 7ம் தேதி பணியில் இருந்த போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மூளை சாவு அடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் ஒப்புதலின்படி, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் தானமாக வழங்கப்பட்டன.
News September 10, 2025
திருவள்ளூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)