News September 8, 2024

உலக ஒழுங்கிற்கு மாபெரும் அச்சுறுத்தல்: CIA

image

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை CIA மற்றும் பிரிட்டன் உளவுத்துறை M16 இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இரு நாட்டு உளவுத்துறைகளும் இணைந்து பொதுவெளியில் கோரிக்கை வைப்பது இதுவே முதல்முறை. பனிப்போர் காலத்தை விட, தற்போது உலக ஒழுங்கிற்கு மாபெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் செய்துவரும் ரஷ்யாவையும் கண்டித்துள்ளது.

Similar News

News August 20, 2025

PM, CM பதவி பறிப்பு மசோதா: ஸ்டாலின் கண்டனம்

image

30 நாள்கள் சிறையில் இருந்தால், PM, CM பதவியை பறிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா என குறிப்பிட்ட அவர், இதுவே சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு திருட்டு விவகாரத்தை திசைதிருப்பவே இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிக்கும் மசோதா என்றும் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

image

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?

News August 20, 2025

கூட்டணி சிக்கலில் தவிக்கும் திருமாவளவன்: நயினார்

image

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிராக எதுவும் பேச முடியாமல் திருமாவளவன் சிக்கலில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் தனது நண்பராக இருந்தாலும், தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தர விவகாரத்தில் அவரது கருத்து தவறானது என்றார். இதே கருத்தை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!