News September 7, 2024
பயனாளிகள் கணக்கை நேர் செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(செப்.06) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வள்ளியூர், நாரணம்பாள்புரம், குலவனிகபுரம், சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் பெற்ற பயனாளிகள் விதிகளின்படி பணம் திருப்பி செலுத்தவில்லை. இவர்கள் நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News September 1, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 31, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.31] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News August 31, 2025
நெல்லை: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

நெல்லை மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <