News September 7, 2024

தென்காசி மாதவிக்கு ‘வில்லிசை ஏஞ்சல்’ விருது

image

தென்காசி மாவட்டம் அச்சகுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வில்லிசை கலைஞர் மாதவி. இவர் தனது 14 வயதில் இருந்து தற்போது வரை 1056 வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார். இவரை நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் நல்லாசிரியர் சுப்பா ராஜ் நேற்று(செப்.,6) நேரில் சந்தித்து ‘வில்லிசை ஏஞ்சல்’ விருது வழங்கினார். நம்ம ஊரு பொண்ணுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!

Similar News

News October 5, 2025

தென்காசியில் ஒருவர் தற்கொலை

image

தென்காசியை அடுத்த ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில், உடையாம்புளியைச் சேர்ந்த 48 வயது பாக்கியமுத்து, தென்னை மருந்தின் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி பிரிந்து சென்றதாலும், மதுப்பழக்கத்தாலும் ஏற்பட்ட விரக்தியே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.

News October 5, 2025

தென்காசியில் துப்பாக்கியை ஒப்படைக்க கெடு!

image

தென்காசியில் அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவ.30 தேதி வரை கால கெடு. மேலும் tenkasidfo@gmail.com என்ற இணையதள முகவரியிலும், மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்-04633233550, சிவகிரி- 04636298523, புளியங்குடி-04636235853, கடையநல்லூர் -04633210700, குற்றாலம்-04633298190, தென்காசி -0463323366 தொடர்பு கொள்ளலாம்.

News October 5, 2025

அக்டோபரில் மாற்றுப்பாதையில் இயங்கும் முக்கிய ரயில்கள்

image

மதுரை கோட்ட ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16848 (செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 முதல் 31ம் தேதி வரை, (அக். 8, 15, 19, 20, 21, 29 ஆகிய தேதிகளைத் தவிர) மற்ற நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். ரயில் எண் 16847 (மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்): அக்டோபர் 4 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!