News September 7, 2024
இந்திய அளவில் 3-ஆம் இடத்தை பிடித்த திருச்சி ஏர்போர்ட்

இந்திய அளவில் பிற நாடுகளுக்கான பயணிகளை கையாளுவதில் திருச்சி விமான நிலையம் கடந்த நிதியாண்டில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளதாக ஏர்போர்ட் கவுன்சில் ஆப் இந்திய தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூருக்கான விமான சேவையில் 4-ஆம் இடத்தையும், மலேசியாவுக்கான சேவையில் 2-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. கிழக்காசிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தில் 5-ஆவது இடத்தை திருச்சி விமான நிலையம் தக்கவைத்துள்ளது.
Similar News
News August 16, 2025
திருச்சி: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <
News August 16, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.