News September 7, 2024

திருச்சியில் காதலன் இறந்த சோகம்; காதலி தற்கொலை

image

துவாக்குடி வடக்கு மலை சா்ச்வீதியைச் சோ்ந்த ப்ரீத்திஜூட் (20) ,எழில் நகரை சோ்ந்த சரத் பிரகாஷ் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்ததால், கடந்த ஆக.16ஆம் தேதி சரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பின்னர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ப்ரீத்தியை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று உயிரிழந்தாா்.

Similar News

News August 16, 2025

திருச்சி: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!