News September 7, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட NCC ஒருங்கிணைப்பாளர் கைது

கிருஷ்ணகிரி பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அம்மாவட்ட NCC ஒருங்கிணைப்பாளர் கோபு (47) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும், கோபு அவருக்கு உறுதுணையாக இருந்ததாகவும், சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் அவரும் கலந்து கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Similar News
News August 22, 2025
Specified Employee வருமான வரி விலக்கில் மாற்றம்

Specified Employee-ன் வருமான வரம்பு ₹50,000-லிருந்து ₹4 லட்சமாக உயர்த்தி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வகை ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கும் வட்டியில்லா கடன், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கு இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டு மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கை பெறுவதற்கான வருமானம் ₹2 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
News August 22, 2025
Fantasy App-களை கைவிடும் BCCI?

IPL-க்கு MY 11 CIRCLE App ஸ்பான்ஸர் செய்து வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்ட ஆன்லைன் கேமிங் மசோதாவால், இந்த ஆப் முடங்கும் சூழலில் உள்ளது. இதுபற்றி பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே BCCI செயல்படும் என்றார். அரசு உத்தரவிட்டால், கடந்த காலங்களில் சிகரெட், மது நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்து செய்தது போல், இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பும் ரத்தாகும் என்றார்.
News August 22, 2025
கூட்டணி இல்லை.. அதிமுக அதிகாரப்பூர்வ முடிவு

விஜய் உடன் கூட்டணி என்ற முடிவை அதிமுக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை தவெக மாநாட்டில் அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர், சினிமா வசனம் மட்டும் பேசி CM ஆக முடியாது என EPS, விஜய்க்கு பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக ADMK மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது கழகத்தை விமர்சிக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் EPS உறுதியாக உள்ளார் என திட்டவட்டமாக கூறினார். உங்கள் கருத்து?