News September 6, 2024

சேலம் மாவட்டத்தில் கிடு கிடுவென உயர்ந்த விலை

image

தொடர் முகூர்த்தங்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சேலம் வ.உ.சி. பூ மார்கெட்டில் பூக்களின் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, முல்லை ரூ. 800 க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூஜை பொருட்களான ஒரு வாழை இலை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், வாழைப்பழங்கள் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. 

Similar News

News July 8, 2025

இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

image

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

News July 7, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

error: Content is protected !!