News September 6, 2024

அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை – ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அரசு பள்ளி சமையலறை கூடத்தில் மனித மலம் பூசிய வழக்கில் துரைமுருகன் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா எச்சரித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

நாமக்கல் நான்கு சக்கர வாகன காவலர் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர்-14ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் – தங்கராஜ் (9498170895), வேலூர்- சுகுமாரன் (8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), திருச்செங்கோடு – பெருமாள் (9498169222), திம்மநாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.

News November 14, 2025

திருச்செங்கோடு: காப்பர் ஒயர்களை திருடிய 8 பேர் கைது

image

திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோடு பகுதியில் பி.எஸ்.என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல், செய்தனர். நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

News November 14, 2025

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

error: Content is protected !!