News September 6, 2024
கல்லூரி மாணவர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை

சென்னையில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் மோதல், ரகளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய மாணவர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களது வீட்டுக்கு போலீஸார் சென்று பெற்றோரை வைத்து கவுன்சலிங் அளிக்க உள்ளனர். சிறார்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில், சென்னையில் இயங்கும் 67 போலீஸ் பாய்ஸ் கிளப்களுக்கு புத்துயிரூட்டும் பணிகளும் நடந்து வருகிறது என சென்னை மாநகர ஆணையர் அருண் கூறியுள்ளார்.
Similar News
News September 16, 2025
20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்

நெல்லை-சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News September 16, 2025
சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது…

2050-ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை (WRD) ஒரு பெரிய திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன்படி ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும். ஷேர் பண்ணுங்க