News September 6, 2024
சிட்ரஸ் பழங்கள் இருக்க கவலை எதற்கு?

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தவை. இவற்றை தவறாமல் சாப்பிட்டால், மருத்துவ உதவியே நமக்கு இருக்காது. வைட்டமின் பி, துத்தநாகம், தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல சத்துக்கள் இந்தப் பழங்களில் அடங்கியுள்ளதால் சரும பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு ஆகியவற்றிற்கு இவை உகந்தவை. நீர்ச்சத்து அடங்கிய இப்பழங்களில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையையும் குறைக்க உதவும். SHARE IT.
Similar News
News April 29, 2025
கூட்டணி கணக்கு.. அமித்ஷா – நயினார் சந்திப்பின் பின்னணி!

டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
News April 29, 2025
கோலியின் மூளையில் என்ன இருக்கு தெரியுமா?

எத்தனையோ பேர் இருக்க கோலி மட்டும் எப்படி ரன் மிஷின் ஆனார்? கோலி மட்டுமல்ல, எல்லா ஜீனியஸ்களின் மூளை செயல்படும் விதத்திலும் ஒரு பேட்டர்ன் உண்டாம். அதை System 1, System 2 என உளவியலாளர்கள் பிரிக்கிறார்கள். சாதாரண யோசனைகளுக்கு System 1, மூளையைக் கசக்குகிற திட்டங்களுக்கு System 2. இந்த System 2-வை பயிற்சியின் மூலம் நம் System 1 ஆகவே மாற்றி சாதிக்கலாமாம். இப்போ தெரிகிறதா கோலி ஏன் கிங்குன்னு..
News April 29, 2025
இலவச பட்டா விதிகளில் திருத்தம்!

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் நிலம் வழங்கப்படும். இதில் 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் இல்லை. மீதமுள்ள 1 சென்ட் நிலத்திற்கு அதன் மதிப்பில் 25% தொகையைச் செலுத்த வேண்டும்.