News September 5, 2024
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News August 4, 2025
மின்கட்டணம் போல் பேருந்து கட்டணமும் உயரும்: அன்புமணி

பணவீக்கத்திற்கு ஏற்ப தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த TN அரசு அனுமதி வழங்கயிருப்பதாக
அன்புமணி தெரிவித்துள்ளார். இதனால் மின்கட்டணம் போன்று வருடந்தோறும் பேருந்துக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். திமுகவின் அதிகார மையங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்தின் வழித்தட உரிமைகளை வாங்கியுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகளை இணைத்தே இந்த முடிவை பார்க்க வேண்டிவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News August 4, 2025
CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.
News August 4, 2025
நீங்க இனிப்பு அதிகம் சாப்பிடுபவரா?

சர்க்கரை அதிகமுள்ள பானங்களை, ஒரு நாளைக்கு 2 முறை (அ) அதற்கு அதிகமாக அருந்துவோரின் சிறுநீரில் புரோட்டீன் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரகங்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலையை காட்டுகிறது. ஆகவே சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அவை தேநீர், காஃபி போன்றவையாக இருந்தாலும், சோடா, கோலா போன்ற கூல் டிரிங்ஸாக இருந்தாலும், குறைவாக அருந்துவது நல்லது. தவிர்ப்பது மிகவும் நல்லது.