News September 5, 2024
பெற்றோர்களே உஷார்: Digital Dementia தெரியுமா?

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன Digital Dementia? செல்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு தான் அது. நினைவாற்றல் இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறுவார்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
Similar News
News August 4, 2025
தூங்கும் போது இதை செய்தால் HEART ATTACK-ஐ தடுக்கலாம்

உங்கள் தூங்கும் பழக்கத்தில் 2 நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாக் உள்பட இதயநோய் வரும் ஆபத்தை 26% குறைக்கலாம் என்கிறது அண்மை ஆய்வு. 1)தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும் 2)தினசரி ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும் என்பதே அந்த 2 பழக்கங்கள். மேலும், தூங்கும்முன் போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது, தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே சாப்பிடுவது, பெட் ரூம் சுத்தம் ஆகியவையும் நோய்களை தடுக்கும்.
News August 4, 2025
மின்கட்டணம் போல் பேருந்து கட்டணமும் உயரும்: அன்புமணி

பணவீக்கத்திற்கு ஏற்ப தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த TN அரசு அனுமதி வழங்கயிருப்பதாக
அன்புமணி தெரிவித்துள்ளார். இதனால் மின்கட்டணம் போன்று வருடந்தோறும் பேருந்துக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். திமுகவின் அதிகார மையங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்தின் வழித்தட உரிமைகளை வாங்கியுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகளை இணைத்தே இந்த முடிவை பார்க்க வேண்டிவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News August 4, 2025
CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.