News September 5, 2024

IT செலுத்தும் நடைமுறையில் விரைவில் மாற்றம்

image

IT நடைமுறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களில் IT செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம் எனக் கூறிய அவர், சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதனிடையே, பொருட்களுக்கான GSTஐ கடந்த 5 ஆண்டுகளில் 1% கூட உயர்த்தவில்லை எனக் குறிப்பிட்டார்.

Similar News

News August 4, 2025

தூங்கும் போது இதை செய்தால் HEART ATTACK-ஐ தடுக்கலாம்

image

உங்கள் தூங்கும் பழக்கத்தில் 2 நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாக் உள்பட இதயநோய் வரும் ஆபத்தை 26% குறைக்கலாம் என்கிறது அண்மை ஆய்வு. 1)தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும் 2)தினசரி ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும் என்பதே அந்த 2 பழக்கங்கள். மேலும், தூங்கும்முன் போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது, தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே சாப்பிடுவது, பெட் ரூம் சுத்தம் ஆகியவையும் நோய்களை தடுக்கும்.

News August 4, 2025

மின்கட்டணம் போல் பேருந்து கட்டணமும் உயரும்: அன்புமணி

image

பணவீக்கத்திற்கு ஏற்ப தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த TN அரசு அனுமதி வழங்கயிருப்பதாக
அன்புமணி தெரிவித்துள்ளார். இதனால் மின்கட்டணம் போன்று வருடந்தோறும் பேருந்துக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். திமுகவின் அதிகார மையங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான தனியார் பேருந்தின் வழித்தட உரிமைகளை வாங்கியுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகளை இணைத்தே இந்த முடிவை பார்க்க வேண்டிவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News August 4, 2025

CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

image

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.

error: Content is protected !!