News September 5, 2024
6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் காவல்துறையினருடன் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்ராத்ரி கோதாகுடம் மாவட்டம், காராகுரம் மண்டலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 போலீசார் பலத்த காயமடைந்ததாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News August 4, 2025
₹105 கோடியை வசூலித்தது ‘மகாவதாரம் நரசிம்மா’

‘மகாவதாரம் நரசிம்மா’ படத்தின் வசூல் ₹105 கோடியை தாண்டிவிட்டதாக ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இரணியகசிபு, அவரது மகன் பிரகலாதன், மகா விஷ்ணுவை மையமாக வைத்து புராண அனிமேஷன் படமாக தயாரித்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரித்து அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 4, 2025
திமுகவுக்கு கூட்டணி, அதிமுகவுக்கு மக்கள்: EPS

விவசாயிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டம் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு போராட்டக்களமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். பொய் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியை பிடித்ததாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை என்றும் கூறினார். கூட்டணியை நம்பியுள்ள கட்சி திமுக என்றும், ஆனால் மக்களை நம்பி அதிமுக உள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 4, 2025
தூங்கும் போது இதை செய்தால் HEART ATTACK-ஐ தடுக்கலாம்

உங்கள் தூங்கும் பழக்கத்தில் 2 நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம், ஹார்ட் அட்டாக் உள்பட இதயநோய் வரும் ஆபத்தை 26% குறைக்கலாம் என்கிறது அண்மை ஆய்வு. 1)தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும் 2)தினசரி ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும் என்பதே அந்த 2 பழக்கங்கள். மேலும், தூங்கும்முன் போன், டிவி பார்ப்பதை தவிர்ப்பது, தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே சாப்பிடுவது, பெட் ரூம் சுத்தம் ஆகியவையும் நோய்களை தடுக்கும்.