News September 4, 2024
RR தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக 2025 ஆண்டு ஐபிஎல் தொடருக்கான RR பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 21, 2025
தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு: NIA அதிரடி

PMK நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக 9 இடங்களில் நேற்று NIA சோதனை நடத்தியது. இதில், கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாதுல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட PFI அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான 3 போலீஸ் அதிகாரிகளை தனது ஹோட்டலில் தங்க வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
News August 21, 2025
தவெகவுக்கும் தலைவலியான ஆம்புலன்ஸ்

பரப்புரைக்கு நடுவே நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர் நோயாளியாக்கப்படுவார் என EPS பேசியது பெரும் சர்ச்சையானது. இதேபோல் தவெக மாநாட்டிலும் ஆம்புலன்ஸால் சர்ச்சை வெடித்துள்ளது. மாநாட்டுத் திடலுக்குள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் 4 தவெக தொண்டர்கள் திடலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். தடுப்புக் கம்பிகள் மேல் குதித்தும் தொண்டர்கள் உள்ளே வருகின்றனர்.
News August 21, 2025
டெல்லி CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு

தலைநகரில் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி CM ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பிரிவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 4-6 வீரர்கள் உள்பட 22 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதோடு, ஒரு புல்லட் புரூஃப் வாகனம் உள்பட 5 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாதம் ₹16 லட்சம் வரை செலவாவதாக கூறப்படுகிறது.