News September 4, 2024
குமரியில் 401 வழக்குகள் பதிவு

குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் – சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணையத்தளத்திலும் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் கூறினார்
Similar News
News November 10, 2025
குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பம் விபரம்

குமரி சட்டமன்ற தொகுதியில் 2,81,793, நாகர்கோவில் தொகுதியில் 2,07,186, குளச்சல் தொகுதியில் 2.49,733, பத்மநாபபுரம் தொகுதியில் 2,27,417, விளவங்கோடு தொகுதியில் 2,343,43, கிள்ளியூர் தொகுதியில் 2,43,346 என மொத்தம் 14,43,818 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 90.64 சதவீதம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News November 10, 2025
குமரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

குமரி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <
News November 10, 2025
குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.


