News September 2, 2024

விழுப்புரத்தில் தொடங்கிய மழையால் வாகன ஓட்டிகள் அவதி

image

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டன இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுகள் சற்று அவதியடைந்தனர்.விழுப்புரம் நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News September 1, 2025

உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 1, 2025

விழுப்புரத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்

error: Content is protected !!