News September 2, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு பொதுமக்கள் இன்று குவிந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உடல் ஊனமுற்றோர் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு அளித்தனர்.
Similar News
News August 22, 2025
புதுக்கோட்டை: ஈஸியா சிலிண்டர் புக் பண்ணலாம்!

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
புதுக்கோட்டை: கல்லூரி மாணவன் பரிதாப பலி!

அறந்தாங்கியை சேர்ந்த சுரேஷ்பாபு (17), பிரகாஷ் (18), சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேரும் ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் தேர்வு முடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நானாக்குடி அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மீது மோதியுள்ளனர். இதில் சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.