News September 2, 2024
சேலத்தில் காவல்துறையினர் குவிப்பு

சேலம் மாநகர் பகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்து அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 24, 2025
பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
News August 24, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 24, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆக.27- ஆம் தேதி முதல் செப்.02- ஆம் தேதி வரை சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671) கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.