News September 2, 2024

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

image

வேதாரணியம் அருகே உள்ள கோடியக்கரை கடல் பகுதியில் இரண்டு டப்பாக்களில் பவுடர் வடிவிலான மர்ம பொருள் நேற்று கரை ஒதுங்கி கிடந்தது. டப்பாக்களில் இருந்த பவுடர் மெத்தபெத்தமைன் போதைப் பொருளா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பவுடரை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்து வேதாரண்யம் கடோலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

நாகை: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

நாகை: 10 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

image

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 13, 2025

நாகையில் 10 நாட்கள் ரயில் சேவை ரத்து

image

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!