News September 1, 2024
விருதுநகரில் பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் ஆமத்தூர் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கருப்பசாமி மற்றும் கூடலிங்கம் ஆகிய இருவர் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 19, 2025
விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.
News October 19, 2025
விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
விருதுநகர்: கனமழை – PETROL BUNK-ல் நிகழ்ந்த சம்பவம்

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அக்.19 அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து கார் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.