News August 31, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிகரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி

image

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் நிதி உதவியுடன், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில் தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும் அக்.1ஆம் தேதி முதல் தண்டையார்பேட்டையில் பார்வையற்ற பெண்களுக்கு 6 மாத கால இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு 90423 45660, 93445 48654 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News September 17, 2025

சென்னையில் பெரியாரின் கடைசி பேச்சு…

image

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாருக்கும், சென்னைக்கும் உணர்வுபூர்வமான ஒரு இணைப்பு உள்ளது. ஆம், தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்”. அதுவே அவரின் கடைசிப் பேச்சாக மைந்தது.

News September 17, 2025

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

image

சென்னையில் நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈவேரா சாலை,ராஜாஜி சாலை, உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!