News August 31, 2024
மத்திய அரசால் கல்வி பாதிப்பு: அன்பில் மகேஸ்

ராதாபுரம் வட்டம் கூட்டப்புளி மீனவ கிராமத்தில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் கட்டுமான பணி தொடக்க விழா இன்று(ஆக.,31) நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசால் தமிழகத்தில் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
Similar News
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
News July 7, 2025
சொத்து தகராறில் பஞ்சாயத்து தலைவிக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே உள்ள சேதுராயபுரத்தை சேர்ந்த சாமுவேல் மற்றும் இவரது சகோதரர் லட்சுமணபாண்டிக்கு இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று (ஜூலை.06) இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்க முயன்ற சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.