News August 31, 2024
மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகள் கைது

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, மாமியார் கொள்ளாபுரி. இவர்களுக்கிடையே நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த கொள்ளாபுரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை ஓர் பார்வை!

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்
▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்
▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்
▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.
News September 10, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

ராணிப்பேட்டை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க