News August 30, 2024
அனுமதியின்றி உணவு போட்டி நடத்தக்கூடாது

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் பராமரிப்பு குறித்தான மாவட்ட அளவிலான ஒரு நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளரிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில் பொது இடங்களில் அனுமதியின்றி உணவு போட்டிகள் நடைபெற்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
கோவை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

கோவை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News August 18, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

கோவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கான நேரடி சேர்க்கையானது, 2025ஆம் ஆண்டிற்கான ஐ.டி.ஐ முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை முடிவடைந்த நிலையில், நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8825434331, 9123524155, 7373278939 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.