News August 30, 2024
பரபரப்பு: கரூர் அருகே எலி வடை..?

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகேயுள்ள டீக்கடையில் விற்ற வடையில் எலி இருப்பதாக எலக்ட்ரிஷன் கார்த்திக் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் எலி வடையை சாப்பிட்ட அவர் வாந்தி, மயக்கம் காரணமாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 9, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவங்கி வைக்கும் ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாளை(10.11.25) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்க உள்ளார்கள். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
News November 9, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

கரூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 9, 2025
கரூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். <


