News August 30, 2024
2025 ஐபிஎல் போட்டியிலும் தோனி… ரெய்னா விருப்பம்

2025 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை ருதுராஜ் புரிந்து கொள்ள உதவும் வகையில், மேலும் ஓராண்டு தோனி விளையாட வேண்டும் என்றார். 2024 ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் தோனி வழங்கினார். இதையடுத்து அவர் ஓய்வு பெறலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 21, 2025
செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.
News August 21, 2025
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. TVK புது தீம் சாங்!

மதுரையில் இன்று நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பெயரில் தவெகவின் புதிய தீம் சாங் வெளியாகிறது. கொடி பாடலுக்கு இசையமைத்த தமன் தான் இந்த பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் 1967,1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது பற்றியும், விஜய்யின் அரசியல் பேச்சும் இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
News August 21, 2025
தவெக மாநாட்டில் பரபரப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை

மதுரை தவெக மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுக்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.