News August 30, 2024

2029க்குள் र50K கோடிக்கு பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

image

2029க்குள் र50,000 கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2023-24இல் இந்தியா र21K கோடிக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், உற்பத்தி र1.27 லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். உற்பத்தியை இந்த நிதியாண்டில் र1.75 லட்சம் கோடி, 2029க்குள் र3 லட்சம் காேடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News August 21, 2025

செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

image

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.

News August 21, 2025

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. TVK புது தீம் சாங்!

image

மதுரையில் இன்று நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற பெயரில் தவெகவின் புதிய தீம் சாங் வெளியாகிறது. கொடி பாடலுக்கு இசையமைத்த தமன் தான் இந்த பாடலுக்கும் இசையமைத்திருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் 1967,1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது பற்றியும், விஜய்யின் அரசியல் பேச்சும் இடம் பெறும் எனவும் கூறப்படுகிறது.

News August 21, 2025

தவெக மாநாட்டில் பரபரப்பு.. 2 பேருக்கு தீவிர சிகிச்சை

image

மதுரை தவெக மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுக்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

error: Content is protected !!