News August 29, 2024

நெல்லையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS முதலாண்டு கற்பதற்கு 250 இடங்கள் உள்ளன. இதில் மத்திய ஒதுக்கீட்டு இடம் போக மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுஃ பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த கல்லூரியில் சேர்வதற்கு தேர்வானவர்கள் நாளையிலிருந்து(ஆக.,30) தேதியிலிருந்து செப்.,5ஆம் தேதிக்குள் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News July 7, 2025

நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

error: Content is protected !!