News August 29, 2024
வேலூர் அருகே ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

வேலூர் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டன் குடிசையை சேர்ந்த ராஜேஷ் இந்திய ராணுவத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட ராஜேஷின் உடலுக்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்தும், தேசிய கொடி போர்த்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News August 21, 2025
வேலூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
வேலூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் வாங்கினால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பேசிய டிஐஜி தர்மராஜ் காவல் நிலையங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாதவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்