News August 29, 2024
டூவிலர்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியை சோ்ந்தவர் ஈஸ்வரி. இவர் தனது கணவருடன் நேற்று (ஆக.28) கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே முருகன் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 6, 2025
தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.