News August 29, 2024

காளான் வளர்ப்புக்கும் இனி மானியம்

image

தமிழகத்தில் உண்ணக் கூடிய காளான் வளர்ப்பு, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காளான் முக்கிய உணவுப் பொருளாக மாறி வருவதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, மொட்டுக் காளான், பால் காளான் வகைகளை வளர்ப்பது, வேளாண் சாகுபடி கீழ் கொண்டு வரப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு கிடைக்கும் அரசின் அனைத்துவித மானிய உதவிகளும் காளான் வளர்ப்பவர்களுக்கும் கிடைக்க உள்ளது.

Similar News

News April 10, 2026

குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்திய ஆதவ்

image

தேர்தல் விதிகளை மீறி ஆதவ் அர்ஜுனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த ஆதவ் பிரசாரத்தில் தவெக சின்னம் இருக்கும் சட்டை, கையில் விசில், கட்சி துண்டுகளுடன் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரே விதிகளை மீறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 10, 2026

Sports 360: இன்று களம்காண்கிறது RR vs RCB

image

➤KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றிக்கு வித்திட்ட 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ➤IPL: RR மற்றும் RCB இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன ➤டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக GT கேப்டன் சுப்மன் கில்லுக்கு ₹12 லட்சம் அபராதம் ➤ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்

News April 10, 2026

58 தொகுதிகளையும் டார்கெட் செய்த EPS

image

ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலினும், ஆட்சியை கைப்பற்ற இபிஎஸ்ஸும் தீவிரமாக பரப்புரை செய்கின்றனர். இந்நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் தனிச் சின்னங்களில் போட்டியிடும் 58 தொகுதிகளை EPS டார்கெட் செய்துள்ளாராம். திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் (காங்., விசிக) இணக்கம் இல்லாத நிலை, அதிருப்தி கூட்டணியில் கெமிஸ்ட்ரில் இல்லாதது ஆகிய சூழல்களை பயன்படுத்தி அத்தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறாராம்.

error: Content is protected !!