News August 29, 2024

தமிழ் திரையுலகிலும் பாலியல் தொந்தரவு: ஊர்வசி

image

தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள திரையுலகம் போல தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேச யாரும் முன் வருவதில்லை என்றும், இதனால் தமிழ் திரையுலகில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஊர்வசி குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

News July 7, 2025

நாம் இருவரும் சேரும் சமயம்…!

image

SJ சூர்யா இயக்கும் ‘கில்லர்’ பட இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார். நேற்றைய தினம், படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என SJ சூர்யா கேட்ட கேள்வி நெட்டிசன்களிடம் படுவைரலானது. அதற்கு இன்று காலை பதிலளிப்பதாகவும் SJ சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘நாம் இருவரும் சேரும் சமயம்’ என ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் பாட்டு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2025

பொய் சொல்கிறதா TNPSC? அன்புமணி சரமாரி கேள்வி

image

2024, ஜூலையில் 17,502 பேருக்கு பணி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 8,618 பேரே தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அறிவிப்புக்கு முன்பு எழுதப்பட்ட தேர்வு முடிவுகளைக் கொண்டு 17,702 பேரை தேர்வு செய்துவிட்டோம் என்று TNPSC அறிக்கை விடுவதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். TNPSC, திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!