News August 28, 2024
வங்கி கடன் உதவிகள், முன்னேற்றங்கள் குறித்து ஆட்சியர் கலந்துரையாடல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் சுய தொழில் செய்வோர் தனி நபர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றங்கள் மற்றும் வங்கியில் எத்தனை பேருக்கு கடன் தரப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் ஆற்காடு நகராட்சியில் இந்திராணி ஜனகிராமன் திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சியில் அண்ணாசாலை எச்.எம். ஆடிட்டோரியம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குப்புசாமி திருமண மண்டபம், சோளிங்கர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திமிரி வட்டாரத்தில் கனியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
News September 10, 2025
காவல் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்தார்.