News August 28, 2024
இராமேஸ்வரம் மீனவர் உடல் சடலமாக மீட்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி மீன்பிடிக்கச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பியபோது நடுக்கடலில் படகு மூழ்கி விபத்தானது. இதில் மாயமான மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரை இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் தேடி வந்த நிலையில் தற்போது மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (செப்டம்பர்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News September 8, 2025
ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாளை காலை முதல் செப்.15ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்.25 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.
News September 8, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <