News August 28, 2024

பாலியல் தொந்தரவை எதிர்கொள்ளும் ஆண்கள்: குஷ்பு

image

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக, பாஜக பிரமுகர் குஷ்பு பகீர் கிளப்பியுள்ளார். பெண்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவு குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், ஆண்களும் பாலியல் தொந்தரவை சந்திப்பதாகவும், பாலியல் தொந்தரவை சந்திப்போர் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கீழே பதிவிடுங்கள்.

Similar News

News July 7, 2025

’மகள்களின் சிகிச்சைக்காக அரசு பங்களாவில் உள்ளேன்’

image

SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.

News July 7, 2025

‘மேகதாது திட்டத்துக்கு 5 நிமிடத்தில் அனுமதி பெறுவேன்’

image

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.

News July 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.

error: Content is protected !!