News August 28, 2024

whatsapp தகவலால் ரூ.18 லட்சம் இழந்த இளைஞர்

image

நெல்லை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் கடந்த 16ஆம் தேதி பகுதி நேர வேலைக்காக தனது whatsapp எண்ணிற்கு வந்த தகவலை நம்பி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் அறிவுறுத்தல்படி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,17,500 அனுப்பியுள்ளார். பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று(ஆக.,27) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News July 7, 2025

நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

error: Content is protected !!