News August 28, 2024
புதிய ஓய்வூதிய திட்டத்தில் 6633 ஊழியர்கள் பயன்

மதுரை கோட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 6633 ஊழியர்கள் பயனடைவதாக மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், மதுரை கோட்டத்தில் மொத்தமுள்ள 8242 ரயில்வே ஊழியர்களில் 1609 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6633 பேர் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.
Similar News
News August 27, 2025
மதுரையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.
News August 26, 2025
மதுரை: தேர்வு இல்லாமல்..உள்ளூரில் அரசு வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <
News August 26, 2025
மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.