News August 27, 2024
வலுவான பாறைகளை கடந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் இயந்திரமான காவிரி கடந்த 2 மாதம் முன்பு, அடையாறு மேம்பாலத்தின் கீழ் இருந்தது. வலுவான பாறைகள் காரணமாக பணிகள் மெதுவாகவே நடைபெற்றது. இந்நிலையில், இந்த இயந்திரம் தற்போது வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
சென்னை: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த <
News September 17, 2025
பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட நிலையில், அவசர அவசரமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.