News August 27, 2024

திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணித் திருவிழாவை முன்னிட்டு நாளை 28-ஆம் தேதி விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து 28ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இதே போல வேளாங்கண்ணியில் இருந்து வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும்.

Similar News

News March 4, 2026

திருவாரூர்: பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வர்த்தக சங்க பொருளாளர் டி.ஜெயசெல்வம் திமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் இணைத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக இணைந்த ஜெயசெல்வத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் செல்வம் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News March 4, 2026

திருவாரூர்: காரில் குட்கா பொருள்கள் கடத்திய இருவர் கைது!

image

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். நகர் இருவழிச்சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (28), குஜராத்தைச் சேர்ந்த சோமாபாய் (25) இருந்தனர். மேலும் காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 320 கிலோ இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.

News March 4, 2026

திருவாரூர்: மனைவியை எரித்த கணவர்!

image

சித்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்.28 இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவியின் உடலில் மன்னனை ஊற்றி ஐயப்பன் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஜெயசித்ரா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், பெருகவாழ்ந்தான் போலீசார் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!