News August 27, 2024
பரமக்குடி பூ மாரியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமண குடியிருப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பூத்தட்டு திருவிழாவை முன்னிட்டு இன்று(ஆக.,27) அதிகாலை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ தட்டுகளை தலையில் சுமந்து, கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். அதன் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Similar News
News August 9, 2025
BREAKING: திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவிற்கு புதிய பதவி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இன்று (ஆகஸ்ட்.09) அவருக்கு திமுக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்பொறுப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார்.
News August 9, 2025
ராமநாதபுரம் வழுதூரில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரம், வழுதூர் பகுதியைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதமன் வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊர் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோவிந்தனின் மகன் பிரபு பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 9, 2025
ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த் துறையில் 29 காலிப் பணியிடங்கள் உள்ளது.
▶️10 ஆம் வகுப்பு தேர்ச்சி
▶️சைக்கிள்/பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
▶️விண்ணப்பதாரர் அதே தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ தமிழில் எழுத/ படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️ செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும்.
▶️மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை
இந்த லிங்கில் விண்ணப்பம் <