News August 27, 2024
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி

ஆலங்குடி அடுத்த கலிபுல்லா நகரை சேர்ந்தவர் கணேசன் (75). இவர் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி ஐயப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதியதில், படுகாயமடைந்த அவர் புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.,1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


